வெள்ளி, 8 மார்ச், 2013

நீ கவிதையாய் பார்த்த சில நொடிகளில்

கடந்து செல்லும் சாலையில்


தோன்றும் கானல் நீரை போல்

கனவாய் போனது

உன் மனதில் இடம் பிடிக்க

போரடிய நாட்கள் ....





இல்லை என்று சொன்னாலும்

நொடிப் பொழுதில்

மீண்டும் வந்து போகிறது

இதய துடிப்பாக உன் நினைவுகள்



கடிகார முள்ளை போல்

பின் தொடர்கிறேன்

நொடி முள்ளாக நான்

நீயோ நெடு முள்ளாய் !!!

விட்டு விலகி செல்கிறாய்



நீ கவிதையாய் பார்த்த சில நொடிகளில்

உன் அருகில் இருந்தும்

தொலைந்து போனேன்








Ph:+919942748848