சனி, 28 ஜூலை, 2012

இனிய நினைவுகள்

என்  உயிர்   பிரியும்  வலியை
    உன்  பிரிவில்  உணர்கிறேன்
என்  புன்னகை , உன்  உதட்டில்
    நினைவுகளை ,நிஜங்களை  மட்டும்
ஏன் மறக்க  நினைக்கிறாய்
     உன்  கண்களை  திறந்து  கொல்
 தொலைந்து  போன  என் இதயத்தை
       எடுத்துக்கொள்கிறேன்
உன்  வாசலில்  ஒரு  ரோசாவை  பார்த்து
       புன்னகைக்கும்  நீ  ஏன்?
இந்த  ரோஜாவின்  கடைக்கண்  பார்வைக்காக
      ஏங்கும் என்னை  ஏன்  தவிர்க்க  நினைக்கிறாய் ?
இன்று வரை  ஒரு  அகதியை  போல்
      அலைந்து   கொண்டுருக்கிறேன்
உன்  இதயத்தில்  இடம் கிடைக்காதா?

என் பயணம் அவளுடன் மட்டுமே

என் காதல்  தேய்பிறை  போல்
 தினமும்  தேய்ந்து  கொண்டிருக்கிறது
அவளுடைய  எண்ணங்கள்  என்னை
  ஆட் கொண்டு  விட்டது
சின்ன  கோபம் ,பாசம் , அக்கறை
 அவள்  வெளிப்படுத்தும் விதம்
ஒவ்வொன்றும்  கவிதை ...
அவள் கருவிழிகளில், கண்ணகுழிகளில்
தொலைந்து  போவது  எவ்வளவு சுகம்
அவள்  மனதை  பார்த்து வந்த காதல்
 இன்று  அவள் மனதில்  இடம் பிடிக்க  நினைக்கிறது
அவளுக்காக  என்னை  முழுவதுமாக  மாற்றிவிட்டேன்
  என் பயணம்  அவளுடன்    மட்டுமே    

வெள்ளி, 27 ஜூலை, 2012

காத்திருப்பது எவ்வளவு சுகம் !!!


என்  வெற்றிகள்  ஒவ்வொன்றும்
    எளிதாய்  கிடைக்கவில்லை
வாழ்க்கை என்னும்  கடலில்
  ஆசை  என்னும்  தூண்டிலில்
யாரும்  மாட்டிக் கொள்ளாமல்  இல்லை
  எல்லோருடைய வாழ்விலும்  வந்து போகும்
காதல் , என்னையும்  விட்டுவிடவில்லை
   என் வாழ்க்கையை  புரட்டி  போட்டுவிட்டது
உடன்  பிறப்புகளின்  பாசத்தால்
    எல்லோரும்  அகமகிழ்கிறார்கள்
ஆனால்  ஒரு  பெண்  மீது ஆண்  பாசம்  வைத்தால்
    எதிரியை  போல்  ஆகிவிடுகிறான்
அன்பிற்காக  ஏங்கும் உலகில்
    என் அன்பின்  விலை
யாருக்கும்  தெரியவில்லை
   அவளை போல்  என் மனதை  களவாடி
சென்றவள்  யாரும்  இல்லை
    என் எண்ணங்களில் , அவளின்
 நினைவுகள்  என்றும்  நிறைந்திருக்கிறது
      என்னவொரு  மூட நம்பிக்கை
அவள்  என் கைசேர மாட்டாள்
     என்று  உள் மனது  சொன்னாலும்
இன்றும்  அவளுக்காக  காத்திருக்கிறேன்
    காத்திருப்பது  எவ்வளவு சுகம் !!!

என் காலைப் பொழுது

நேற்றைய  இரவின்  இன்பங்கள்
  காலையில்  மறைந்து  போகிறது
புதுநாள்  , உற்சாகம்  மனதில்
  கையில்  ஒரு  கப்  ப்ரு  காப்பியுடன்
என்  விலையில்லா  தொலைகாட்சி  பெட்டி
 எனக்காக   காத்திருப்பது  போல்
கலைஞர்  டிவியின்  இசை அருவி
 எனக்கு பிடித்த  வீடியோ ஜாக்கி
அவளின்  எத்துப்பல்
 அவளுடன் காலையில் போன்  செய்து  வழியும்
அலையா விருந்தாளிகள்
  என் நண்பனுடன்  சின்னதாய்  ஒரு அரட்டை
மீண்டும்  அழகான  பாடல்கள் , அதில்
 என் எண்ணங்கள்  முழ்கிவிடும்
பின் சிறிய  குளியல் ,
 ஒரு வழியாக  என் காலைப் பொழுது
 தொடங்கியது ..

உனக்காக காத்திருக்கும் என் காதல்

உன் வீட்டு  முற்றத்தில்  வரும்  
 நிலவுக்கு உன் காதலை  வெளிபடுத்துகிறாய் 
உன்  வீட்டு  ரோஜா செடியுடன்
 காதலாகி , உறவாடுகிறாய்
உன்  மேல் கொண்ட காதலினால்
  உனக்காக  காத்திருகிறது ,உன்  நேத்தி  பொட்டு
  உயிர் இல்லாத  எல்லா ஜிவன்களிடமும்
 உன் காதலை  வெளிபடுத்கிறாய்
ஏன் என்னிடம்  மட்டும்  மறைக்கிறாய்
  உனக்காக காத்திருக்கும்  என் காதல் 

விண்ணை தாண்டி வருவாயா !!!

என் எண்ணங்களின்  வண்ணங்கள்  நீயாகிறாய்
    உன் நினைவுகள் என்னை தினமும் கொல்லுகிறது
உன் விழி அசைவில்  என் வாழ்கை
     மறந்து விடாதே ...
நீ  என்னை  வெறுத்தாலும்  உன்னையே நேசிக்கிறேன்
      என்னை கொஞ்சம்  ஏற்றுகொள்வாயா
என்னை உன்னுள் இழந்து விட துடிக்கிறேன்
      என் அழகான ராட்சசியே !
உன்  கண்கள் என்னும்  போதையில்  வீழ்ந்துவிட்டேன்
     என்னை உன் அன்பினால்  கரை  சேர்ப்பாயா
உன் வார்த்தைக்காக வாழ்நாள்  முழுவதும்  காத்திருக்கிறேன்
     என்ன செய்வது  என்று  புரியவில்லை ..
என் காதலை  எப்படி வெளிப்படுத்துவது ...
   கடவுளிடம்  முறையிட்டேன் , பதில் இல்லை
 என் கடவுளுக்கும்  மேலாக  உன்னை நினைக்கிறேன்
    உன் மனதில் சிறதளவு  இடம் கிடைக்குமா ?
என் பிரியமானவளே ..
    என் வாழ்வின் ஒவ்வொரு  நொடிபொழுதும்
 நம்பிக்கையுடன்  காத்திருக்கிறேன்

விண்ணை தாண்டி  வருவாயா !!!





  

வெள்ளி, 20 ஜூலை, 2012

You are my soul


Life is beautiful
  unless without you baby
she is my soul
  Make me sick everyday
Every minute , my thoughts around her only
  My heart beats,Pumping high
She stole my identity
   she is so awesome
Her blossoms, spreads like an air
   Her cute look, spoil my daily routine
My heart melted like an Ice
   Whenever she spoken with me
Wow... will decide my future baby
   you only my reasons
whenever her ignorance,Made me sick
   but my hearts follow you always
Baby. you are my soul
    you're my life
Always Waiting For you...
   You are so lucky
Because my hearts follows you
    I don't know why...
Nowadays my heart wounded..
   My living space knows my Cry
Still you are calm..,
  Atleast one cute smile enough
To boost my remaining life
       I know you baby...
because I am close to you..
  
         My hearts speaks...
 





சனி, 14 ஜூலை, 2012

பரிமாற்றங்கள்

 தொலைவில்  பார்த்தவுடனே
  மனதில்  ஒரு பரவசம்
என்  மனதோ  அருகில்  செல்
 என்று  என்னை  இயக்கியது
அவளை  நெருங்கி  செல்லும்  செல்லும்போது
  என் இதயம் சில  நிமிடங்கள் உறைந்தது
என்  வார்த்தைகளோ  தடுமாறியது
 ஏன்  இந்த தவிப்பு !
 என்னுடைய  செய்கைகள்   அவள்   அறிவாலோ
 தெரியவில்லை ?
பேருந்தில்  செல்லும் முன்  அவளின்
 ஒற்றைச்சிரிப்பு  இன்றும்
மறக்கவில்லை...




என் காதல்

அந்த  ஒற்றை  புன்னகை  சிரிப்பால்
 சுனாமியில்  பேரலை  சிக்கியது  போல்
என் மனம்  இடம்  மாறியது
 ஒரு   நாள்  உன்னை  பார்க்காமல்
என்  மனம்  என்னிடம்  இல்லை
 உன்னை  அழைக்க , என் மனதில்
ஒரு ஆயிரம்  போராட்டம்
 இதுதான்   காதலா
ஏனோ   புரியவில்லை  எனக்கு
 நிலவின்  ஒளியில்  சூரியனை
தேடும்  ஒரு குருடனை  போல்
 என்னை  உன்னுள்  தேடி  அலைகின்றேன்
உன்னுள்  உன் இதயத்திற்குள்
 தொலைந்து போவது
எவ்வளவு  பரவசம்
 விழிகளால் பேசி , மொழிகளால்
என்னை ,மெல்லிய   உணர்வுகளை  துண்டிய
  உன்  அழகுக்கு ,நான்  எப்போது
காவலன்  ஆகா  மாற்றுவாய் ...


என் சின்ட்ரெல்லா

 கிடைக்காத  அன்பும்
    மறுக்கப்படுகின்ற  காதலும்
 மரணத்தை  விட கொடுமையானது
   என்  சின்ட்ரெல்லா  என்னை
ஏற்க மறுத்தாலும்
  அவள்  கண்களால்
என்னை  எப்போதுதோ
 கைது  செய்து  விட்டாள் 


வியாழன், 12 ஜூலை, 2012

மனதின் வாய்ஸ்

சூரியன் மறையும் மாலை வேளை
    நடு வானில் பறவைகளின் அணிவகுப்பு
இயல்பாக அரங்கேறியது வான் வெளியில் ஒரு டிராபிக்
       வானுர்திகளும் கூட , ஒரு நிமிடம்
நின்று செல்கின்றன
       என் விட்டு தென்னை மரங்கள்
காற்றின் ஆசைக்கு ஏற்ப தலை ஆட்டுகிறது
      என் விட்டு துணி உலர்த்தும் கொடிகம்பம் கூட
அதன் ஸ்ருதிக்கு ஏற்ப ஆடுகிறது
       நானும் காற்றின் வாசனையை நுகர்கிறேன்
என் மனதை ஈர்ப்பது போல்
       பறவைகள் உலா வருகின்றன
நானும் அதனுடன் போட்டியிட்டு பறக்கிறேன்
       என் சிறு வயது நினைவுகளை அசை போடுகிறேன்
வெள்ளை நாரைக் கொக்குகள் வானில் வலம்வரும் போது ,
           உன் கைவிரல்களை நீட்டி கொண்டு ,
மனதிற்குள் வேண்டிக்கொண்டால்
         அவை வெள்ளை பூக்களை கை விரல்களில் தூவும்
என்னுள் உள்ள குழந்தை மனதும் ...
       நொடிப்பொழுதில் கை விரல்களை அதன் திசையை நோக்கி
நீட்டியது அன்னிச்சையாக என் மனதும் ,
         அந்த நாரைக் கொக்குகள் என்னை கடந்து வானில் மறைந்தது
சில நொடிகளில் , என் கை விரல்களை விரித்து பார்த்தால்
        ஒரு முழு நீள வாசகம்
" என் இந்த சோகம் உன்னுள் ..
உன் அன்பை பெற யாருக்கும் தகுதியில்லை
என்னை போல் , உன் மன சிறகை விரித்து பறந்து செல்
உன் அன்பை பிறருக்கு வெளிபடுத்து
அவர்கள் உன் அன்பை பெற விரும்பினால் "
என் மனதோ , விடுதலையான இந்தியாவை போல்
சந்தோசம் அடைந்தது ...
இது வரை இல்லாத ஒன்றை தேடி கொண்டு இருந்தேன்
இனிமேல் ... என் வாழ்கை பயணத்தை சுகமாக
தொடங்க போகிறேன் ...
என் சிறை பட்ட மனதின் வாய்ஸ்...


 







திங்கள், 9 ஜூலை, 2012

சென்னையில் ஒரு மாலைபொழுதில்

மனதில் ஒரு வெறுமை
  எனக்குள்  பெரிய  மாற்றம்
இந்த  சில  மாதங்களில் ,
 என் வீட்டை  மறந்தேன்
என்  டைலர்  லிஸ்ட் இல்  எல்லோரும்
  என்  அப்பாவை தவிர
என்னை அழைத்தாலும் , கண்டுகொள்ள  மறந்தேன்
   ஒரு மாலை   வேளையில்
என் வீட்டு  மாடியில்  உள்ள  சின்டக்ஸ்  - இல்
 என்னை  சாய்த்து  கொண்டு
என் கையை , என் கன்னத்திற்கு  ஊன்றுகோலக்கி
 அவளை நினைத்து  கொண்டு இருந்தேன்
முப்பொழுதும் , ஒரு சில நிமிடங்கள்
  என்னை வேகமாக  கடந்து  செல்லும்  அவளின்  நினைவுகள்
 இருந்தும் , சாலையில்  மதிய வேளையில்
   சுட்டெரிக்கும்  சூரிய  வெப்பத்தில்  தெரியும் கானல்   நீரை  போல்
என் கை சேர  மறுக்கிறாள் 
  நண்பர்களையும்  விட்டு வைக்கவில்லை
அவர்களையும்  மறந்தேன் 
   என்னை கடந்து  செல்லும் காகம்  குட
இந்த மாலைவேளையில்  சந்தோசமாக  இருக்கிறது
 என்னால்  மட்டும் முடியவில்லை
என் மனதை  அவளே  பூட்டி விட்டாள்
 அதன் திறவு கோலும்  அவளிடமே உள்ளது
அவளை எண்ணி கவிதையும்  மலர்ந்தது
  அவள் மேகங்களுக்கு   நடுவே  நின்று
என்னை  அழைப்பது போன்று தெரியும்
  உடனே  காற்றைவிட  வேகமாக  சென்று
அவளின் கரம்  பிடிக்க   நினைப்பேன்
  அவளோ , களைந்து செல்லும் மேகத்தை போல்
என்னிடமிருந்து விலகி செல்கிறாள்
  அவள்  மனதின்  பனிப்பாறைகளில்  உரசி
அவளின் உதவியை நாடுகிறேன்
   கரை சேர ..
என் காதல்  ஒரு  கரை சேரா  ஓடம் போல்
  அவளின்  நினைவுகளால்  மட்டுமே
கரை சேர முடியும் ..
     
       





வெள்ளி, 6 ஜூலை, 2012

புன்னகை துளிகள்

மழை  வரும் போது வரும்  மண் வாசத்தை போல்
 அவளை கடந்து போகும்போது
என்னுள்  அவள் வாசம்  செய்கிறாள்
 என் வாழ்கை என்னும் பாலைவனத்தில்
அவளால்  மழைத்துளி  வருமா ?
 மழைக்கு எங்கும் வானத்தை  போல்
அவள் புன்னகை என்னும் மழை துளிக்காக
 வாழ்கை முழுவதும்  காத்திருக்க போகிறேன் ...

என் வானவில்

காலையில்  தோன்றி  மாலையில்
 மறைந்தாலும்  எனக்கும்
வானவில்லுக்கும்  ஒரு நட்பு  உள்ளது
 காலையில் , அதன்  வண்ணக்  கதிர்  குவியல்களுடன்
என்னை எழுப்புகிறது
 என் மனமோ ,பறவையை  போல்
அதன் அருகில்  பறந்து சென்று ,
  சின்னதாக ஒரு  'Hai' சொல்லிவரும்    
மாலைவேளையில்  என் விட்டு  முற்றத்தில்
 என் தலை சாய்த்து   அதை வரவேற்க காத்திருப்பேன்
அதன் வண்ணங்களுடன்  மறைந்து இருந்தாலும்
 ஒரு முறை  எனக்காக  ..
பொன்னிற வண்ணத்துடன்  நிலவை
  துணையாக  அனுப்பும்
நாங்கள்  இருவரும் பேசி கொள்ளும்போது
  நான்  காதலயை  பற்றி என்ன நினைக்கிறாய் ?
என்றதும் .அதன்  ஒளிக்கதிர்கலளால்
  அதன் தேவதையின் , இருப்பிடத்தை  உணர்த்தியது
நிலவோ ..அவளைவிட  ஒளிவிசினாலும்
  அவளின்  கண்களின் காந்த அலைகளுக்கு  முன்
ஒழி வெற்றி போனது.
  இன்றுவரை  அவளை காதலித்தாலும்
நிலவால் வெளிபடுத்த முடியவில்லை
 என்னிடம் மட்டும் சில நேரங்களில் வெளிபடுத்தும்
சில நிமிடங்களில் , நிலா மறைந்தது
 வானம் மேக முட்டதுடன்   இருந்தது
நானும் சிறிது  நேரம் தொங்கிவிட்டேன்
 எதோ ஒன்று  கன்னத்தில்  பட்டு  தெரித்தது
மீண்டும் ,மீண்டும்  திண்டியது
 மழைத்துளியாக ..
அவள் மேல் கொண்ட  அன்பை  வெளிபடுத்தியது !
 இன்றும்  நிலவின்  காதல்  தொடர்கிறது
என்றாவது  வெளி படுத்துமா 
 அதன் காதலை ?

ஏக்கத்துடன்   நிலவின் நண்பன் ..


வியாழன், 5 ஜூலை, 2012

எங்கே என் அழகிய தமிழ் மகள்

அவள்  கோவிலுக்கு  செல்லும் அழகை
    எப்படி வர்ணிப்பது
பட்டு நிற தாவணியில் , காலில் 
   வெள்ளி கொலுசுடன்
அவள் என்னை  கடந்து செல்லும் பொது
    நான்  மட்டும் அல்ல , எல்லோரும்
ஒரு நிமிடம்  திரும்பி  பார்ப்பார்கள்
    எங்கள் விட்டு  தோட்டத்தின்  நடுவே
காலையில் அவள் நடந்து செல்லும் வரை
    புல்லில் மீது   உள்ள  பனித்துளிகள் காத்து கிடக்கின்றன
அவள்  கால் பாதங்களில்  , உரசும் அந்த  ஒரு நொடியில்
    பிறவி பலனை  அடைகின்றன
வழியில் செல்லும்போது , உதிர்த்து கிடக்கும்
   இலைகளை  எடுத்து  தன கன்னத்துடன்
ஒரு முறை காதலுடன்  உரசி கொள்வாள்
  உடனே அதற்கும்  காதல் தீ
பற்றிகொள்ளும் ..
  கோவிலில்  அவள்  தரிசனம் செய்துவிட்டு
வரும் வரை காத்திருப்பேன்
  அவளின் தரிசனம் காண

நெற்றியில் திருநிருடன் , ஈர குந்தலளுடன்

  இடது கையில் அபிசேக தட்டுடன் ,
வலது கை காற்றில் கலைந்த குந்தலை 
 வருடி கொண்டு  என்னை  கடந்து செல்வாள்
ஒரு நிமிடம் இதய  துடிப்பு ,
  நின்று விடும்..
மொத்தத்தில்  அவள்  ஒரு அழகிய தமிழ் மகள்
  ஆனால்  இன்றைய பெண்களோ
சூடிலும் , லோ  ஹிப்  Pant இல்
 எடுப்பாக  தெரிந்தாலும் ..
அவளை  போல்  யாரும் இல்லை
 அவளுக்கும்  இன்றைய பெண்களுக்கும்
    ஒரு ஒற்றுமை உள்ளது ..
இருவரும்  அழகான தமிழச்சிகள்
   ஒருவனக்காக  வாழும்  தேவதைகள்
ஒரு  தமிழச்சியின் மனதில் இடம் பிடிப்பது
  அவ்வளவு  எளிதல்ல ..
அவர்களை போல்  மனதை  கொள்ளை அடிப்பது
 யாரும் இல்லை ..

            என்  தமிழச்சியை  தேடி கொண்டு இருக்கிறேன் ...








 

What Should I do?

My heart beats followed her only,
 She made me slave
Her smile makes me uncomfortable
 Whenever my home I saw her in space
She is a sparkling Star
  I am following her in space.
Why she is amazing?
She will be cousin of monelisa
In my living space,
Her smile spreads over there…
I don’t have any idea to impress her.
But she impressed without asking my heart
Wow. I know her smile
Will be powerful weapon
To destroy my heart.
I am trying to find my place to her heart
It is always closed…
What should I do

ஞாயிறு, 1 ஜூலை, 2012

En NANBAN

இந்த எழுத்துகள் என் நண்பன் நினைவாக எழுதியது ...


நண்பன்   என்ற  வார்த்தைக்கு  அர்த்தம் தெரியாத  போதே
எனக்கு  நட்பை  புரிய வைத்தவன்
ஒரே  சைக்களில் ஒன்றாக சென்று ,
வழியில்  செல்லும்  அனைத்து பெண்களயும்
முந்தி  சென்று ,செல்லும்  பொது ,
அவர்களை ஓர  கண்ணால் பார்த்துக்கொண்டே , தேன் மிட்டாய்
தின்றது
எங்கள்   வகுப்பின்  பொங்கல் விழாவன்று
யாருக்கும்  தெரியாமல்  வெள்ளம் திருடி  தின்றது
என் வகுப்பு  எஞ்சல்கள் பார்க்க வேண்டும்  என்பதற்காக
சைக்களில் கைவிட்டு  ஒட்டி சென்றது
வேலியே  பயீறை மேய்வது  போல்
எங்கள் பள்ளி மாணவர்கள்  மதிய  உணவு  இடைவெளியின்  பொது
அருகில்  உள்ள  தோட்டத்தில்  திருடி  தின்றார்கள்
அவர்களை  கண்டிப்பது போல்  பாவனை செய்து
அந்த  தோட்டத்து  மாங்காய் திருடி  தின்றது
மதிய  உணவு  இடைவெளியில்  வேண்டும் என்றே
பள்ளி  தோட்டத்து  செடிகளுக்கு  வாட்டர்   தெளித்து
நேரத்தை  இன்பமாக  செலவிட்டது
இங்கிலீஷ்   எஸ்ஸே  வை  என்னுடைய  தோழிகளுக்கு  முன்
நன்றாக  கரும்பலகையில்  எழுதி  அவர்களின்
பாராட்டுகளை  வாங்கியது
என்னோடைய  வகுப்பில்  நாடக  போட்டியில்
நாரதர் வேஷம் போட்டு ,நாராயண  நாராயண என்று சொல்லி
என் தோழிகளின்  கிண்டலுக்கு பலி  ஆனது
எங்கள் பள்ளியின்  வினாடிவினா போட்டியில்
முதல்  பரிசை  உன்றாக  வாங்கியது
நான் பரிச்சையில்  பெயில் ஆனபோது
அவனுடைய  மதிப்பெண்ணை  எனக்கு  மாற்றி
சொல்லி என்னை  காத்தவன்
இன்று  அவனை  தேடி கொண்டு இருக்கிறேன்
என் ஊருக்கு செல்லும் பொது
கண்டிப்பாக  நான் படித்த பள்ளியை
என் பள்ளியின்  வகுபறையை
பார்க்கும் போது என் கடந்த காலங்கள்
நினைவுக்கு வரும்.மேலும்
பள்ளியின்  ஓவ்வெரு மரங்களின்  நடுவே
நடந்து  செல்லும்போது நாங்கள்  இருவரும்
ஒன்றாக சென்று   மரசெடிகளுகும் தண்ணிர்   தெளித்து சந்தோஷ பட்டது
என் கண்முன்னே  நிழலாக  வந்து செல்லும்
 
என்  நண்பன் என்னுடன்  நடந்து  வருவதை  போல்
தோன்றும் ,இன்றும்  தேடி கொண்டு இருக்கிறேன்
இன்று  படித்த எல்லோரும்  நல்ல  வேலைக்கு  செல்கிறார்கள்
தான்  படித்த  பள்ளியை  , இளமை  கால வாழ்கையை  யார் 
நினைத்து பாக்கிறார்கள்
எல்லோர் வாழ்க்கையிலும்  ஆட்டோக்ராப்  போல்
ஏதோ ஒரு நண்பர்கள் இருப்பார்கள் என் தோழிகள் குட இருப்பார்கள்
அவர்களை முடிந்தால்  நினைத்து பாருங்கள் ...











Tu Eres Mi Vida (You Are My Life)


Her smile spread over the office
 Wow. Angel came to office.
My daily life starts with this Boost.
 Why she is most beautiful to me every day

Her chubbyness, childisness, Anger, lovely cute eyes
 All Are like a poetic words
No words to describe her.
 I pray to god to impress her
But god says even I am also impressed
 I got very tough competition
Now I feel god also fallen in love with her.
She is like an Apple.
  That invention Made by God
I want to steal her smile and occupy a small space in her mind
 It is really tough for me.
She is not an ordinary girl to impress
 My life starts daily with her remembrance in my mind.
  I feel her presence in my room in my living space.
Am I Crazy?
I asked myself. Answer came from my bottom of my heart.
LOVE
 I got a feeling.
My heart always says her name.
  I am a big fan of her.

Waiting for Angel presence in my life.
  In my home all are waiting for her including me
When will I propose her?
  I don’t have guts to say this
“Dear Angel, I want to be your Servant in my Remaining Life,
Give me a Chance to impress. I ensure to Make you more comfortable in life and spend my life to Protect and satisfy your needs and ambition.

“Kindly give a chance. I want to be your life partner”
WILL YOU MARRY ME? Thevathai….

AVALIN VILIIRPU VISAII KU MAYANKI KATHIRKIREN
 KATHALUDAN



AVal Manthin Facebook...

அவளுடன்  என்  காதல்
Facebook  போன்றது ,
அவளின்  Wall இல்  தினமும் ,
எழுதிகிறேன் ...
உன்னை  விரும்புகிறேன்  என்று ,
அவளோ  White Wash  அடித்து விடுகிறாள்
தினமும்  அவளை பார்கையில்
என் மனதில் ஒரு நொடிக்கு ஆயிரம்
TWEET கள்   பறக்கின்றன
இருந்தாலும் , அவள்  மனதின் TWITTER ID 
கண்டுபிடித்து  Tweet பண்ண முடியவில்லை
என் Skype இல்  இருந்தாவது  வீடியோ வில்
சொல்லிவிடலாம்  என்று இருந்தேன்
அவளோ விட்டில் SKYPE இல்  கோலங்கள் சீரியல்  பார்க்கிறாள்
என் TEAMVIEWER இல் இருந்து
என் மனதை ரிமோட் connection எடுத்து
பார்க்க சொல்லலாம்  என்று நினைக்கிறன்
ஏனோ முடியவில்லை
அவளை Connect பண்ணினால்
அவள் மனதை Password ஆக  வைத்து இருக்கிறாள்
என்றாவது  அந்த   Password  ஐ  decrypt  செய்து
அவள் மனதின் FACEBOOK   ஐ  கண்டுபிடித்து  விட
நினைகின்றேன்

My life Journey Starts....

உன் நினைவுகளில் நிந்துகின்றேன்
என் எண்ணங்கள் முழுவதும் , உன்னை சுற்றிவருகிறது
ஒவ்வொரு நாளும் புதிதாக தெரிகிறாள்
ஆனால் , அதே மனது ,நாட்கள் ஓடினாலும்
அவளுடன் பேசிய அந்த நாட்கள் மறக்கமுடியவில்லை
பேருந்து நிலையத்தில் ,
என்னுடன் பேசினால் ,
நான் அவள் கண்ணகளை பார்த்துக்கொண்டே இருந்தேன்
பிரியமானவளை கண்டு கொண்டேன்
மனமோ அலைந்து கொண்டு இருக்கிறது
இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் அன்பிற்காக ஏங்குகிறார்கள்
நான் அதை செலவிட நினைக்கிறன்
காதல் நேர்மையும் கற்று கொடுகிறது
அவளிடம் சொல்ல ஆசைபடுகிறேன்
என்னோட வாழவேண்டும்
நீ இல்லாத என் வாழ்கை பயணம் முடிவு பெறுவதில்லை ..

அவளின் நினவுகளில் மிதந்த நாட்கள் ...

இன்று மட்டும் நான் தனியாக
ஏன் ஆபீஸ் மெயில் பாக்ஸ் உடன்
எங்கும் நிசப்தம் , நான் மட்டும் தனியாக
என் பிசியை உற்று பார்த்துக் கொண்டுஇருக்கிறேன்
எங்கும் ஏதோ ஒரு உணர்வு !
நான் தனியாக இல்லை என்று ..
அவளை என் சுவாசத்தில் , பரிசங்களில் உணர்வுகளில்
உணருகிறேன்
அவள் இருக்கையில் யாரும் இல்லை
அருகில் சென்றேன் !
பல நாள்கள் நான் பார்த்த அந்த
அழகிய இடம் இன்று வெறுமையாக உள்ளது
உடனே சென்று அவள் இருக்கையில் அமர்ந்தேன்
காதல் அலைகளை உணர்தேன் !
அவள் வைத்த மீதித் தண்ணிரை காதலுடன் பருகினேன்
அவள் இடத்தை விட்டு காதலுடன் நகர்ந்தாலும் ,
நான் மட்டும் தனியாக இல்லை !
என் காதலியும் இருக்கிறாள்
அவள் கருவிழிகள் என்னை பார்க்கின்றன
பயம் விலகியது .
ஆனால், என் காதலை ஏற்றுகொல்வளோ ! அல்லது மறுப்பாளோ என்று
மனதில் பயம் தொடங்கியது .



விழிஈர்புவிசை

அவள் கருவிழிகளின் குழிகளில்
விழுந்தேன் !
என்னவொரு பரவசம் ,
இது ஒரு அழகான விபத்து
ஒ ! இதுதானோ விழிஈர்புவிசை
இங்கு நியூட்ட்னும் விழ்ந்துவிட்டான்