ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஒருதலை காதல்

  நீ தொட்டுவிடும் தூரத்தில் 
 என் மனதில்  என்றும் அருகில் 
வந்து செல்லும் உன் நினைவுகள் 
  கடந்து செல்லும் காற்றும்  
ஒரு நிமிடம் என்னை கண்ணடித்து செல்கிறது  
  காற்றை  போல உன்னை நன் தழுவி செல்ல 
ஏனோ முடியவில்லை 
     சலனம் இல்லாத,என் மனதில் 
அலையை போல,தொட்டு செல்லும் 
   உன் புன்னகை 
ஆனால் அனுதாப அலை கூட  
    என் வானிலையில் அடிக்கவில்லை ஏனோ 
ஒருதலை காதல் என்றும் 
   கரை சேரா  ஓடம் ஆகிவிடும் 
மனதிற்கு தெரிந்தும்.
  கடல் கறை  மணலில் 
தேடிக்கொண்டு இருக்கிறேன் அவளுடன் 
  நான் கடந்து சென்ற படத்த சுவடுகளை 

காத்து இருப்பதும் காதலில் ஒரு வலி தான் 
  கிடைக்காத ஒன்றின் மேல்தான் நம் 
ப்ரியம் இருக்கும் .
   காத்திருக்கும் நொடிகளும் சுகமாக 
தோன்றினாலும்,நம்மை நாமே 
    வருத்தி கொண்டாலும் 
நம்மை தேடிவரும் தேவதைகள் 
    மிகவும் பஞ்சமே இந்த உலகத்தில் 

நாளைய பொழுதும், இதே நம்பிக்கையில் 
    செல்லாமல், 
நம்மை தேடிவரும் தேவதைக்கு 
  என்றும் அன்புடன் இருப்போம்