வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அவள்

அவள் நடந்து செல்லும் பாதையெங்கும்
    பூக்களாக மாறியது
அவள் கன்னத்தில் பட்டு உரசி சென்ற
    காற்று மேகமாய் மாறி மழையை பொழிந்தது
 அவள் சூடி கொண்டதால் ரோஜாப்பூவும் அழகானது
    சாலையில் அவள் நடந்தால் எங்கும் டிராபிக் ஜாம்
 அவள் புன்னகை குளோஸ்- அப் புன்னகையை விழ்த்தியது
     நானும் காத்திருந்தேன் , என்னை கடந்து செல்லும்
  ஒரு நொடிக்காக பஸ்ஸ்டாப்பில் ....


 

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பனித்துளிகள்

உன் விழியின் வழியில்
   என் வாழ்கை
துணையாக வருவாயா !!!
   வாழ்கை முழுவதும் 
அவள் நடந்து போகும் திசையெங்கும்
   மேகக்கூட்டங்கள்
அவள் மேல் கொண்ட காதலால்
   மழையாய் பொழிந்தது வானம்....
 
 
அவள் வீட்டு நாய்குட்டி போல்
   அவள் கூடவே இருக்க ஆசைப்பட்டேன்
 
 
உன் அன்பின் மழையில் நனைய ஆசை
    மழையாய் வருவாயா
என் மேகத்தில் .....
 
 
ஏன் பெண்ணே என்னை தினமும்
   கொள்கிறாய் ..
உன் பார்வையால்!!!
 
 
உன் நெற்றி பொட்டில்
   குவித்து வைத்துள்ளாய்
உன் மொத்த அழகையும் ...

சனி, 11 ஆகஸ்ட், 2012

சென்னையில் ஒரு மழைக்காலம்

  மழைச்சாரலின்  போது  வரும்  மண் வாசனை  போல் 
    அவள்  என்னருகில்  இருந்தாள்
தீடிர் மழையால்  மகிழ்ந்து  போனது 
    சென்னை  மட்டும்  அல்ல , நானும்  தான்
அருகில்  இருந்தும் ,மழையில் நனைந்த 
   தீப்பெட்டி போல்  பற்ற முடியாமல் 
தவிக்கிறது  என் தீக்குச்சி  மனது 
     நண்பனிடம்  பிரியா  விடை பெற்று 
 நனைந்த மனதுடன் , நடைபாதையின்
    கருப்பு வெள்ளை  கோடுகளுக்கு  இடையே 
அவள் மனதின்  வெள்ளைக்  கோட்டை 
   என் கால் பாதங்களில் தீண்டிக்  கொண்டே  நடந்தேன் 
வழியெல்லாம்  பெருவெள்ளம் 
     கூட்டுக்கு  விரைவாக  பறந்து  செல்லும் பறவையாய்
  சாலையில்   மஞ்சள் ஒளியில் மின்னும் வாகனங்கள் 
     என் மேல் விழுந்த  சிறுதுளியை  ரசித்து கொண்டே நடந்தேன் 
  நான் நடந்த  பாதையில் அவளும்  நடந்தாள்
    கருப்பு கோடுகளை  தாண்டாமல் 
என் மனதின்  நிறமோ  கருப்பு 
     தினமும்  ஒரு மழைக்காலம்  
  அவள்  என்னுடன்  வந்தால் 
பேருந்தில் நான் பயணம்  செய்யும் போது 
    அவளின்  ஞாபகம் மழை நீரைப்போல் 
பேருந்தின் கண்ணாடியில்  வழிந்து செல்கிறது 
     என்னை  அறியாமல்  துடைத்துக்  கொண்டேன் 
என் விழியில்  வழிந்த  நீரை !!! 
    மீண்டும்  அவளின் அன்பின் மழையில்
 நனைய  ஆசை!!!
     வருமா  என் காதல்  மேகம் ...
அவளுடன்  வாழ்ந்தால்  தினமும் 
   மனசெல்லாம்  மழை தான்








வியாழன், 9 ஆகஸ்ட், 2012

விழுந்தேன்


நான் உன்னிடத்தில் விழுந்தேன்
உன் அழகில் அல்ல
உன் கன்னத்தின் ஆழமான குழிகளில் !!!

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

உங்கள் நண்பன்


எல்லோர் வாழ்விலும்
    வரும்  ஒரு  இனிய  வசந்தம்
தென்றலும் , சுனாமியும்  வரும்  இந்த உலகத்தில்
      நம்மை அவன் பாசத்தால் கரை சேர்ப்பான்
அவன் இல்லா நாட்கள்
    கருமை சூழ்ந்த  இரவை  போல் இருக்கும்
என் எண்ணங்களை , என்னை விட
     முதலில்  அறிந்து செய்பவன்
எந்த பெண்ணை  சைட்  அடித்தாலும்
     எங்களுக்குள்  சண்டை வந்ததில்லை
வாழ்வின்  பாதியில்  வந்து  வலியை தந்து
    மறந்து செல்லும்  பெண் தோழிகள்  போல் அல்லாமல்
என்  வெற்றியிலும் , வலியிலும் ஆறுதல் சொல்வான்
    ஒரு  மச்சானாக , மச்சீயாக, அமிகோஸ் ஆக
 எல்லோர் வாழ்விலும்  வருவான் இந்த நண்பன்
     ஒவ்வொரு ப்ரண்ட்சும்  தேவை மச்சான் ...


இதை என் இனிய நண்பர்களுக்கும் ,தோழிகளுக்கும்  சமர்பிக்கிறேன்
      அன்புடன்
        உங்கள்  நண்பன்



சனி, 4 ஆகஸ்ட், 2012

மனகோட்டை

அவளை  எண்ணி  என் மனதில்
 கட்டிய   கோபுரம் , பாரிஸ் ஈபில்  விட பெரியது
என் மனதில், வாசம் செய்ய
    என் கோபுரத்தை ஒரூ முறையாவது  பார்பாயா?
என்று  காத்து கொண்டு இருக்கிறேன்
    ஏனோ அவள்  இன்று வரை  வரவில்லை
என் கோபுரமோ!
    பைசா நகர  சாய்ந்த  கோபுரமாகிப் போனது
மண்ணில் விழுந்து  சரியும் முன் வந்து விடுவாள்
     என்ற நம்பிக்கையுடன்
நாட்களை  கழித்து கொண்டு இருக்கிறேன்


      

என் குட்டிமா!!!

என்  காதல்  பயணத்தில்
  அவளின்  குட்டி  ஸ்மைல்,மெலிதான  கோபம்
இனிய  நினைவுகள்  என்னை ஆட்கொண்டிருக்கும்
    என்  குட்டிமாவின்  பெயரை  என் வீட்டின்  அருகில்
உள்ள  கள்ளி செடியில்  எழுதி வைத்தேன்
    இனிய இரவின்  நிலா ஒளியில்  மின்னியது
கடற்கரை  மணலில்  எழுதி  வைத்தேன்
    அவள் மேல் கொண்ட காதலில்  அள்ளி சென்றது அலை
என் விட்டு  மாடியில்
     இரவுப் பொழுதில்  உலாவரும் இரு நச்சத்திரங்கள்
வான் வெளியில் என் காதலை  எழுதினேன்
      ஒன்று நான் ,மற்றொன்று  என் குட்டிமா
எங்கள்  இருவரின்  நெருக்கமும்  வளர்பிறை போல்
     ஆனால் இன்று , தேய்பிறை  போல்  தேய்ந்து  போனது
முன்பை விட அந்த  இரு நச்சதிரங்களின்  இடையே
     உள்ள  நெருக்கம்  குறைந்து  போனது
அவளை  என் மனதில்  எழுதி  வைத்துள்ளேன்
      காலம் என்னும்  அலை  அடித்து  செல்லாமல்
பாதுகாத்து  வருகிறேன்




வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

அவள்!!!

அவள் சிரிப்பில்
    என் இதயத்தை தொலைத்தேன்
அவளின் பார்வையில்
    என் கண்ணியத்தை இழந்தேன்
அவளின் பேச்சில்
     என் மௌனத்தை கலைத்தேன்
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
    அவளை தவிர ...

எப்படி என் மனசுக்குள் வந்தாய்

என் எண்ணங்களை ,
   அவள் மேல் கொண்ட காதலை
வெளிப்படுத்த இன்று வரை முடியவில்லை
    அவளிடம் சொல்ல ஆசையாக இருந்ததது
உன் விழி அசைவில் ,
    என் வாழ்கை முழுவதும்
உன் ரசிகனாக வாழ ஆசைப்படுகிறேன் என்று
    என்னை முழுவதும் மாற்றிக்கொண்டு
அவள் பின்னால் செல்ல விரும்பினேன்
    அவளோ இன்றுவரை இதயத்தை மாற்றிக்கொள்ள மறுக்கிறாள்
என் கனவில் தினமும் வரும்
    இந்த குட்டி தேவதையை சிறைபிடிக்க
துடிக்கிறேன் ... ஏனோ முடியவில்லை
    என் அருகில் இருந்தும் அந்த வெண்ணிலாவோ  
என்னிடம் மட்டும் ஒளிவீச மறுக்கிறது
   அந்த நிலவின் பார்வை என்றாவது
என்னை நோக்கி திரும்புமா ?...
    இன்றும் தேடிக்கொண்டு இருக்கிறேன்