சில நேரங்களில்
விக்கலும் வந்து செல்லுகிறது
ஒரு நிமிடம் நீ என்னை
நினைத்து இருப்பாயோ
என்ற என்ன தோன்றுகிறது
உன்னை கடந்து செல்லும் நொடிகளில்
காற்றை போல் வந்து தழுவி செல்லும்
உன் வாசனை,என்ன வென்று சொல்லுவது?...
நீ அறியாமல் ,நானும் தழுவி
செல்லுகிறேன்
என் நேசத்தால்
நட்பாய் பழக ,
செல்லமாய் கோவப்பட
மெலிதாய் ஒரு புன்னகை
உரிமையுடன் என்னை மிரட்டும்
இரு கரு விழிகள்
தேடுகிறேன் என்
பிரியமான தோழியை ....
மறக்க துடிக்கும்
நினைவுகள்
பேசிய அழகிய நாட்கள் ,
பார்வையால் உணர்ந்த நொடிகள்
இன்றும் நீ தேவைதையை போல்
வந்து செல்கிறாய்
என் கனவில் ..
தினமும் வேண்டுகிறேன்
மறக்காமல் இருக்க ...
நீ சொல்லும் ஒவ்வெரு வார்த்தையும்
கவிதையே
என்னைவிட உன்னை ,ரசித்தவன்
யாரும் இல்லை ,
ஏனோ உனக்கு மட்டும் புரியவில்லை
உலகத்தில் பிடித்த மொழிகளில்
இடம் பிடிக்காமல் போனது
உன் மௌனம் ..
இந்த மொழியை ,நேசிக்கிறேன்
என் தாய்மொழியை விட
அதிகமாக ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக