காதல்
என் இதயத்தில் தோன்றி
அவளின் எண்ணங்களில் முடிந்தது
எதிரியாய்!
காலைப்பொழுது சூரியனாய்
இரவின் தென்றலாய்
மழைப்பொழிவின் போது மண் வாசமாய்
என்றும் அவளின் நினைவுகள்
கவிதையாய் கண்கள்
இவை பேசும் மொழிகள் ஆயிரம்
இதன் அர்த்தங்களோ யாருக்கு புரியும்
இன்றும் புரிந்தது போல் நினைக்கிறேன்
என் உயிர் வரை தீண்டிப் போகிறது
தேவதையின் பார்வை
வாழ்வின் ஒரு பாதியாய்
வசந்தமாய் வீசினாள்
என் இலையுதிர் கால வாழ்வில்
நானே பேசிக்கொள்கிறேன்
நடுரோட்டில்
இன்றாவது நீ என்னை நினைப்பாயா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக