அறிவிக்கப்படாத மின் வெட்டைப்போல்
இருண்டு போனது உன் நேசம்
அவள் நடந்து செல்லும் பாதையெங்கும்
பின் தொடர்வேன் தெருவிளக்காய்
வெங்காயத்தை போல்,
என் எண்ணங்களை உரித்துப் பார்க்கிறேன்
அங்கும் கண்களில் கண்ணீர்தான்
கடற்கறை மணலை
கவர்ந்து செல்லும்
கடல் அலையைப் போல்
என் மனதை கவர்ந்து சென்று
இன்று ஏன் அமைதியாய் இருக்கிறாய்
உன் எதார்த்தமான சிரிப்பில்
தோற்று போகிறேன்
தினமும்...
ரயில்வே தண்டவாளம் போல்
அருகில் இருந்தும்
ஒன்று சேர முடியவில்லை
என்னை சாய்த்து விட்ட கவிதை நீ
பெண்ணே
நீ ஏன் எனக்கு மட்டும் கவிதையாகிப் போனாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக