ஞாயிறு, 7 அக்டோபர், 2012

உன் கண்களால் மன்னிப்பாயா

உன் இதயத்தில் இடம்பிடிக்க
   இலையை வைத்து கரை செல்ல துடிக்கும்
எறும்பை போல் போராடினேன்
   இலையை கூட எனக்கு தர விருப்பம் இல்லை
வாழ்ந்தால் உன்னோடும் இல்லை என்றால்
   நினைவுகளால் வாழ ஆசை
என் காதலை கருணை கொலைசெய்து விட நினைக்கிறன்
   முடியவில்லை!!!
தினமும் போராட்டம் எனக்குள்
   உன்னை கரம் பிடிக்க நினைத்த நாட்களோ
என் மன முடிச்சுகளை அவிழ்க்க நினைக்கிறது
  ஏனோ உன் அடிமையாகி போனது
என் மனது!
  உன்னை என் மனதில் எழுதி வைத்தாலும்
என்னால் ஏற்பட்ட மன காயத்திற்கு
   உன் கண்களால் மன்னிப்பாயா

 

1 கருத்து: