சனி, 4 ஆகஸ்ட், 2012

என் குட்டிமா!!!

என்  காதல்  பயணத்தில்
  அவளின்  குட்டி  ஸ்மைல்,மெலிதான  கோபம்
இனிய  நினைவுகள்  என்னை ஆட்கொண்டிருக்கும்
    என்  குட்டிமாவின்  பெயரை  என் வீட்டின்  அருகில்
உள்ள  கள்ளி செடியில்  எழுதி வைத்தேன்
    இனிய இரவின்  நிலா ஒளியில்  மின்னியது
கடற்கரை  மணலில்  எழுதி  வைத்தேன்
    அவள் மேல் கொண்ட காதலில்  அள்ளி சென்றது அலை
என் விட்டு  மாடியில்
     இரவுப் பொழுதில்  உலாவரும் இரு நச்சத்திரங்கள்
வான் வெளியில் என் காதலை  எழுதினேன்
      ஒன்று நான் ,மற்றொன்று  என் குட்டிமா
எங்கள்  இருவரின்  நெருக்கமும்  வளர்பிறை போல்
     ஆனால் இன்று , தேய்பிறை  போல்  தேய்ந்து  போனது
முன்பை விட அந்த  இரு நச்சதிரங்களின்  இடையே
     உள்ள  நெருக்கம்  குறைந்து  போனது
அவளை  என் மனதில்  எழுதி  வைத்துள்ளேன்
      காலம் என்னும்  அலை  அடித்து  செல்லாமல்
பாதுகாத்து  வருகிறேன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக