வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

எப்படி என் மனசுக்குள் வந்தாய்

என் எண்ணங்களை ,
   அவள் மேல் கொண்ட காதலை
வெளிப்படுத்த இன்று வரை முடியவில்லை
    அவளிடம் சொல்ல ஆசையாக இருந்ததது
உன் விழி அசைவில் ,
    என் வாழ்கை முழுவதும்
உன் ரசிகனாக வாழ ஆசைப்படுகிறேன் என்று
    என்னை முழுவதும் மாற்றிக்கொண்டு
அவள் பின்னால் செல்ல விரும்பினேன்
    அவளோ இன்றுவரை இதயத்தை மாற்றிக்கொள்ள மறுக்கிறாள்
என் கனவில் தினமும் வரும்
    இந்த குட்டி தேவதையை சிறைபிடிக்க
துடிக்கிறேன் ... ஏனோ முடியவில்லை
    என் அருகில் இருந்தும் அந்த வெண்ணிலாவோ  
என்னிடம் மட்டும் ஒளிவீச மறுக்கிறது
   அந்த நிலவின் பார்வை என்றாவது
என்னை நோக்கி திரும்புமா ?...
    இன்றும் தேடிக்கொண்டு இருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக