கோடைப் பூக்கள் அவளைப் பார்க்க ஏங்கியது
பனித்துளியைப் போல் வெள்ளை உள்ளம் கொண்டவள்
இந்த பூவின் வாசம்,குறிஞ்சிப்பூவின் வாசத்தை வீழ்த்தியது
இவள் செல்லும் பாதையெல்லாம் பனிமூட்டம்
மேகக்கூட்டங்களும் தலைவணங்கி சேவகம் செய்தது
பூக்களும் இவளைப் பார்த்தவுடன் தலை சாய்ந்து கொள்கிறது
காற்றில் தவழ்ந்து வரும் இசையைப் போல்
அவளின் பேச்சு என் இதயத்தை வருடியது
தேவதையின் கனவில் கறைந்து
தினமும் வாழ ஆசைப்படுகிறேன்
நெற்றிப் பொட்டு ஒன்றே போதும்
அவளின் அழகைச் சொல்லிவிட
கனவுகள் தருகிறாள்,ஏக்கங்கள் தருகிறாள்
இந்த கொங்கு நாட்டு தேவதையிடம் இழந்தேன்
என்னை முழுவதும்
இந்த பூவின் வாசத்தில் மயங்கியது கொடைக்கானல் மட்டும் அல்ல
நானும் தான் ...
உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக