திங்கள், 3 செப்டம்பர், 2012

காலைப்பொழுது

சூரியனின் ஒளிக்கீற்றுகள்
  என் வீட்டின் ஜன்னலில் வாசம் செய்ய
கண்களை தேய்த்து கொண்டே எழுந்தேன்
  என்னை வரவேற்ற சூரியனை பார்க்க
சோம்பலும் ,காலை கனவுகளும் முறிந்துபோக
     என் உடம்பை முறுக்கி எழுந்தேன்  
 என் வீட்டு மாடியில்,காலையில்
    பல் துலக்கி கொண்டே வானத்தை பார்ப்பது
  எவ்வளவு சுகம் ...
    இன்றாவது என்னை அழகாக மாற்றாதா !!!
 நான் வாங்கிய பேசியல் க்ரீம்
     என் மனதில் பேசியபடி , தலைவாரிக்கொண்டு
 ரயில்வே பாதையில் அதை முந்திக்கொண்டு
     நடந்தேன்,கண்களில் புதிய நம்பிக்கையுடன்
 பேருந்தில் உள்ள கூட்டத்தில்,
     பக்கத்து மனிதனின் வேர்வை நாற்றம், கால்மிதிபடுதல்
 பேருந்து ஓட்டுநரின் விளையாட்டுதனமான குலுங்கல்
     ஆகமொத்தம் விடுதலையான சிறைப்பறவையாய் ,
   இறங்கினேன் என் அலுவலக வாசலில்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக