பனிபடர்ந்த அந்த சோலைவனத்தில்
வெற்றி பெற்ற வீரனாய் பறந்தது எங்கள் வாகனம்
நின்றது ,சில்வர் அருவியின் அழகைக்காண
புகை மூட்டம்,நிரம்பிய சாலையில்
நிழலுக்கு ஒதுங்கிய வாகனமாய் , காத்திருந்தேன்
குளிர்ந்த காற்று மேனி எங்கும் தீண்டிட வழிபார்த்து இருந்தேன்
மேனி படர்ந்த கம்பளி சால்வையுடன் ,
தேவதை நடந்து வந்த அழகைச் சொல்லிட
வார்த்தைகள் என் தமிழில் இல்லை
சில்வர் அருவியும் உறைந்து போனது
ஏன் ? என்னைப்போல் மனதை பறிகொடுத்தது
பேசும் போது வெளிப்படும் சிறு பனிப்புகை
காற்றில் கலந்து என் கன்னத்தை உரசிச் சென்றது
இப்படி ஒரு காலைப்பொழுது
மீண்டும் வருமா ...
அவள் என் குட்டி தேவதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக