திங்கள், 3 செப்டம்பர், 2012

வறுமையில்

காதல் நேற்று கண்ட கனவாய் உள்ளது
   என் இதயத்தில் ஆரம்பித்த காதல்
கானல் நீரைப் போல் ஆனது
   எல்லாம் இருந்தும் இவள் அன்பில்லாமல்
வறுமையில் வாடுகிறேன்!!!
   வறுமையில் இதுவும் ஒருவகை
காதலியின் அன்பில்லாமல் வாடுவது !!!
   என்னுள் ஏற்படுத்திய மாற்றத்தை அறியாமல்
தினமும் ஒரு வண்ணத்துடன் வரும் பட்டாம் பூச்சிபோல்
   சிறகடித்துக் கொண்டு இருக்கிறது அந்த நிலவு
என்றாவது என் வானில் வட்டமிடுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக