என் வெற்றிகள் ஒவ்வொன்றும்
எளிதாய் கிடைக்கவில்லை
வாழ்க்கை என்னும் கடலில்
ஆசை என்னும் தூண்டிலில்
யாரும் மாட்டிக் கொள்ளாமல் இல்லை
எல்லோருடைய வாழ்விலும் வந்து போகும்
காதல் , என்னையும் விட்டுவிடவில்லை
என் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது
உடன் பிறப்புகளின் பாசத்தால்
எல்லோரும் அகமகிழ்கிறார்கள்
ஆனால் ஒரு பெண் மீது ஆண் பாசம் வைத்தால்
எதிரியை போல் ஆகிவிடுகிறான்
அன்பிற்காக ஏங்கும் உலகில்
என் அன்பின் விலை
யாருக்கும் தெரியவில்லை
அவளை போல் என் மனதை களவாடி
சென்றவள் யாரும் இல்லை
என் எண்ணங்களில் , அவளின்
நினைவுகள் என்றும் நிறைந்திருக்கிறது
என்னவொரு மூட நம்பிக்கை
அவள் என் கைசேர மாட்டாள்
என்று உள் மனது சொன்னாலும்
இன்றும் அவளுக்காக காத்திருக்கிறேன்
காத்திருப்பது எவ்வளவு சுகம் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக