திங்கள், 9 ஜூலை, 2012

சென்னையில் ஒரு மாலைபொழுதில்

மனதில் ஒரு வெறுமை
  எனக்குள்  பெரிய  மாற்றம்
இந்த  சில  மாதங்களில் ,
 என் வீட்டை  மறந்தேன்
என்  டைலர்  லிஸ்ட் இல்  எல்லோரும்
  என்  அப்பாவை தவிர
என்னை அழைத்தாலும் , கண்டுகொள்ள  மறந்தேன்
   ஒரு மாலை   வேளையில்
என் வீட்டு  மாடியில்  உள்ள  சின்டக்ஸ்  - இல்
 என்னை  சாய்த்து  கொண்டு
என் கையை , என் கன்னத்திற்கு  ஊன்றுகோலக்கி
 அவளை நினைத்து  கொண்டு இருந்தேன்
முப்பொழுதும் , ஒரு சில நிமிடங்கள்
  என்னை வேகமாக  கடந்து  செல்லும்  அவளின்  நினைவுகள்
 இருந்தும் , சாலையில்  மதிய வேளையில்
   சுட்டெரிக்கும்  சூரிய  வெப்பத்தில்  தெரியும் கானல்   நீரை  போல்
என் கை சேர  மறுக்கிறாள் 
  நண்பர்களையும்  விட்டு வைக்கவில்லை
அவர்களையும்  மறந்தேன் 
   என்னை கடந்து  செல்லும் காகம்  குட
இந்த மாலைவேளையில்  சந்தோசமாக  இருக்கிறது
 என்னால்  மட்டும் முடியவில்லை
என் மனதை  அவளே  பூட்டி விட்டாள்
 அதன் திறவு கோலும்  அவளிடமே உள்ளது
அவளை எண்ணி கவிதையும்  மலர்ந்தது
  அவள் மேகங்களுக்கு   நடுவே  நின்று
என்னை  அழைப்பது போன்று தெரியும்
  உடனே  காற்றைவிட  வேகமாக  சென்று
அவளின் கரம்  பிடிக்க   நினைப்பேன்
  அவளோ , களைந்து செல்லும் மேகத்தை போல்
என்னிடமிருந்து விலகி செல்கிறாள்
  அவள்  மனதின்  பனிப்பாறைகளில்  உரசி
அவளின் உதவியை நாடுகிறேன்
   கரை சேர ..
என் காதல்  ஒரு  கரை சேரா  ஓடம் போல்
  அவளின்  நினைவுகளால்  மட்டுமே
கரை சேர முடியும் ..
     
       





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக