வெள்ளி, 27 ஜூலை, 2012

விண்ணை தாண்டி வருவாயா !!!

என் எண்ணங்களின்  வண்ணங்கள்  நீயாகிறாய்
    உன் நினைவுகள் என்னை தினமும் கொல்லுகிறது
உன் விழி அசைவில்  என் வாழ்கை
     மறந்து விடாதே ...
நீ  என்னை  வெறுத்தாலும்  உன்னையே நேசிக்கிறேன்
      என்னை கொஞ்சம்  ஏற்றுகொள்வாயா
என்னை உன்னுள் இழந்து விட துடிக்கிறேன்
      என் அழகான ராட்சசியே !
உன்  கண்கள் என்னும்  போதையில்  வீழ்ந்துவிட்டேன்
     என்னை உன் அன்பினால்  கரை  சேர்ப்பாயா
உன் வார்த்தைக்காக வாழ்நாள்  முழுவதும்  காத்திருக்கிறேன்
     என்ன செய்வது  என்று  புரியவில்லை ..
என் காதலை  எப்படி வெளிப்படுத்துவது ...
   கடவுளிடம்  முறையிட்டேன் , பதில் இல்லை
 என் கடவுளுக்கும்  மேலாக  உன்னை நினைக்கிறேன்
    உன் மனதில் சிறதளவு  இடம் கிடைக்குமா ?
என் பிரியமானவளே ..
    என் வாழ்வின் ஒவ்வொரு  நொடிபொழுதும்
 நம்பிக்கையுடன்  காத்திருக்கிறேன்

விண்ணை தாண்டி  வருவாயா !!!





  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக